Tuesday, March 6, 2012

சினிமாவில் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தேன் - சூர்யா பேச்சு

 
 
உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள படம் "ஒரு கல் ஒரு கண்ணாடி". நாயகியாக ஹன்சிகா நடித்துள்ளார். ராஜேஷ் இயக்கியுள்ளார். இப்படத்தின் பாடல் சி.டி. மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சத்யம் தியேட்டரில் நடந்தது. நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் பங்கேற்று இவற்றை வெளியிட்டனர். விழாவில் சூர்யா பேசியதாவது:-
 
உதயநிதி ஸ்டாலின் முதல் படத்திலேயே நல்ல அனுபவசாலி போல் நடித்துள்ளார். டான்ஸ் ஆட வரவில்லை என்றார். அதற்காக பயப்பட தேவையில்லை. "நேருக்கு நேர்" படத்தில் நடித்த போது எனக்கு ஆட வரவில்லை. சண்டை போடவும் தெரியாது. அதன் பிறகு திறமையை வளர்த்துக் கொண்டேன். அது போல் நீங்களும் திறமையை வளர்த்து முன்னுக்கு வரலாம்.
 
எல்லா துறையிலுமே கஷ்டப்பட்டால் தான் உயர முடியும். நானும் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தேன். என் வளர்ச்சிக்கு நான் மட்டும் காரணம் அல்ல. என்னை வைத்து படம் எடுத்த இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற இசையமைப்பாளர்கள் மற்றும் திரையுலகில் உள்ள பலரும் காரணமாக இருக்கிறார்கள்.
 
இவ்வாறு சூர்யா பேசினார்.
 
விழாவில் நடிகர்கள் ஜெயம்ரவி, சிபிராஜ், உதய நிதி ஸ்டாலின், விஷ்ணு, சந்தானம், நாயகி ஹன்சிகா, சரண்யா பொன்வண்ணன், இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், தரணி, பேரரசு, ராஜேஷ், தயாரிப்பாளர் துரை தயாநிதி, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



No comments:

Post a Comment

Popular Posts

Pages

Popular Posts